Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி வீட்டில் சமையல் வேலை செய்ய தயார்: ஓ.எஸ்.மணியன்

Webdunia
புதன், 2 மே 2018 (08:13 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு ஒருபுறம் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயத்தில் ராகுல்காந்தியும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், அவர் நினைத்தால் கர்நாடக முதல்வரிடம் கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
 
இந்த நிலையில் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சீர்காழியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டால், அவரது வீட்டில் சமையல் வேலை செய்யவும் தயார் என்று கூறியுள்ளார். 
 
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல், இந்த விஷயத்தில் ராகுல்காந்தியை தேவையில்லாமல் அமைச்சர் குறைகூறுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments