Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் நிறுவனத்திற்கு தினமும் ரூ.85 லட்சம் நஷ்டம்: அமைச்சர் நாசர்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:04 IST)
ஆவின் நிறுவனம் தினந்தோறும் ரூ.85 லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது குறித்து விளக்கமளித்த அமைச்சர் நாசர், ஆவின் நிறுவனம் தினமும் ரூ.85 லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் அதனால்தான் இனிப்புகள் விலை உயர்த்தப்பட்டதாகவும் கூறினார் 
 
எனினும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலை அதிகரிப்பு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 மேலும் சுகர்லெஸ் பொருட்களுக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று கூறிய அமைச்சர்,   நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை குறைந்த விலையில் பால் விற்பனை செய்து வருகிறோம் என்றும் கறந்த பால் கலப்படம் இல்லாமல் விற்பனை செய்து வருகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments