Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக இடைத்தரகர்கள் ஒழிப்பு; 10 கோடி மிச்சம்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (12:01 IST)
கொரோனா முன்கள பணியாளர்களுக்கு வசதி செய்து தருவதில் இடைத்தரகர்களை ஒழித்ததால் பணம் மிச்சப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்த நிலையில் புதிதாக ஆட்சியமைத்த திமுக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவு, தங்குமிட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்குவதில் அதிமுக ஆட்சியின்போது இருந்த இடைத்தரகர்களை ஒழித்ததால் தற்போது மாதத்திற்கு ரூ.10 கோடி அரசுக்கு மிச்சமாகிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments