Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுபுகுந்து கொள்ளையடித்த போலீஸார்; மடக்கி பிடித்த மக்கள்! – வேலூரில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (11:39 IST)
வேலூரில் சாராய ரெய்டுக்கு சென்ற காவலர்கள் வீட்டை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குரு மலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் முறைகேடாக கள்ள சாராயம் காய்ச்சுவதாக வெளியான புகாரின்பேரில் அரியூர் காவல்நிலையத்தை சேர்ந்த 4 காவலர்கள் அங்கு ரெய்டுக்கு சென்றுள்ளனர்.

நச்சுமேடு கிராமத்தை சேர்ந்த இளங்கோ மற்றும் செல்வம் ஆகிய இருவர் கள்ள சாராயம் காய்ச்சுவதாக வெளியான தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றபோது இருவரது வீடும் பூட்டியிருந்துள்ளது. பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற காவலர்கள் அங்குள்ள பீரோவை உடைத்து 8.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையறிந்த கிராம மக்கள் அவர்களை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபடவே எடுத்த பொருட்களை காவலர்கள் திரும்ப கொடுத்துள்ளனர். எனினும் முறைகேடாக காவலர்களே பணம் திருடியது குறித்து நடவடிக்கை தேவை என அரியூர் காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்ட நிலையில் சம்பந்தபட்ட 4 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

அடுத்த கட்டுரையில்
Show comments