Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுபுகுந்து கொள்ளையடித்த போலீஸார்; மடக்கி பிடித்த மக்கள்! – வேலூரில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (11:39 IST)
வேலூரில் சாராய ரெய்டுக்கு சென்ற காவலர்கள் வீட்டை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குரு மலையில் உள்ள நச்சுமேடு கிராமத்தில் முறைகேடாக கள்ள சாராயம் காய்ச்சுவதாக வெளியான புகாரின்பேரில் அரியூர் காவல்நிலையத்தை சேர்ந்த 4 காவலர்கள் அங்கு ரெய்டுக்கு சென்றுள்ளனர்.

நச்சுமேடு கிராமத்தை சேர்ந்த இளங்கோ மற்றும் செல்வம் ஆகிய இருவர் கள்ள சாராயம் காய்ச்சுவதாக வெளியான தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றபோது இருவரது வீடும் பூட்டியிருந்துள்ளது. பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற காவலர்கள் அங்குள்ள பீரோவை உடைத்து 8.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையறிந்த கிராம மக்கள் அவர்களை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபடவே எடுத்த பொருட்களை காவலர்கள் திரும்ப கொடுத்துள்ளனர். எனினும் முறைகேடாக காவலர்களே பணம் திருடியது குறித்து நடவடிக்கை தேவை என அரியூர் காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்ட நிலையில் சம்பந்தபட்ட 4 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments