Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்ச்சல் எதிரொலி: புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் விடுமுறையா?

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (11:19 IST)
குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து புதுவை அரசு சமீபத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் பள்ளிகள் நேற்று முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திலும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது என்பதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் நோயின் தன்மையை ஆராய்ந்து அதன் பின் தான் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
 
தற்போது பரவிவரும் காய்ச்சலால் பலரும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறினாலும் இது குறித்து பள்ளி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆய்வு செய்து ஒரு முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments