Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா. சுப்ரமணியன் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:13 IST)
யூடியூப் பார்த்து  வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி. 

 
அரக்கோணம் அருகே நெடும்புலி என்ற கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு யூடியுப் பார்த்து கணவரும் அவருடைய உறவினர்களும் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.
 
இதில் குழந்தை பரிதாபமாக பலியானது என்பதும் லோகநாதனின் மனைவி அதிக ரத்தப் போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்த கணவர் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்ட நிலையில் லோகநாதன் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 
 
இதனிடையே இச்சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், யூடியூப் பார்த்து  வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை. இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments