Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தியதால் தடுப்பூசிகள் வந்துள்ளன: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (20:54 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டால் ஜூன் 3 முதல் தடுப்பூசியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது 
 
இதனை அடுத்து இன்று மாலை 4.20 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:
 
மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மற்றும் 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்துள்ளன என்று தெரிவித்தார். மொத்தம் 6.5 லட்சம் தடுப்பூசி தற்போது இருப்பதாகவும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments