Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேர கட்டுபாடு குறைக்கப்படுமா? – அமைச்சர் பதில்!

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (12:47 IST)
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுபாடு கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது போலவே இந்த ஆண்டும் சில மாற்றங்களோடு நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

தீபாவளி திருநாளின்போது பட்டாசு வெடிப்பதால் கரியமில வாயுக்கள் காற்றில் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும் பட்டாசு வெடிப்பதால் ஒலி மாசுபாடும் பல்வேறு விபத்துகளும் ஏற்படுகின்றன. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான காலக்கெடுவை கடந்த ஆண்டு முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வாங்கும் அளவிற்கும் இந்த ஆண்டு முதல் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் கே.சி.கருணப்பன் “கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவு நிர்ணயம் செய்யப்படும். மேலும் சுற்றுசூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளையே வாங்குவதற்கும், வெடிப்பதற்கும் அனுமதி அளிக்கப்படும். நேர கட்டுபாடு குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்த பிறகு விரைவில் அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments