Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்ப உதவியது யார்? கடம்பூரார் சரண்டர்!

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (13:42 IST)
என்னையும் ஆய்வாளர் ஸ்ரீதரையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என கடம்பூர் ராஜு விளக்கம். 
 
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து விசாரித்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. 
 
இதுகுறித்து உடனடி விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்தது. இந்நிலையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மட்டும் சிபிசிஐடியிடம் சிக்காமல் தப்பி வந்த நிலையில், கயத்தாறு அருகே தப்பி சென்று கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  
 
தற்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பிசெல்ல அரசியல் பிரமுகர் ஒருவர் உதவி செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாத்தான்குளம் வழக்கில் கைதான ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், என்னையும் ஆய்வாளர் ஸ்ரீதரையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments