Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம் பூம் மாட்டிடம் ஆசிர்வாதம் பெற்ற ஜெயக்குமார் – வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிவு !

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (08:53 IST)
அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நடைப்பயிற்சியின் போது பூம் பூம் மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்கிய வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மீன்வளத் துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் அதிமுகவின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மீடியாக்களை சந்திக்கும் நாட்களில் மீம் கிரியேட்ட்ர்ஸ்க்குக் கொண்டாட்டம்தான். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில் வினோதமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அதிகாலையில் வாக்கிங் செல்லும் அவர் எதிரே வரும் பூம் பூம் மாட்டுக்காரரை நிறுத்தி அந்த மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். அதை வீடியோவாக எடுத்து டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டிவிட்டில் ‘பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களைக் கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments