இதுதான் ரஜினியின் புதிய கண்டுபிடிப்பு: ஜெயகுமார் கிண்டல்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (10:33 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து மாணவர்களிடையே பேசும்போது, 'தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது என்றும், தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் அனைவரும் ஆங்கிலத்தை நன்றாக பயின்று கொள்ள வேண்டும், என்றும், ஆங்கிலம் இருந்தால்தான் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நல்ல பணியில் சேர முடியும் என்றால் அப்படி செய்தால் தமிழனுக்கும் பெருமை, தமிழும் வளரும் என்றும் கூறினார்
 
ரஜினியின் இந்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, 'மாணவர்களை தமிழ் பேசச் சொல்லாமல் மம்மி, டாடி என்று ஆங்கிலம் பேசச் சொல்கிறார் ரஜினி என்றும், தமிழ் பேசினால் தமிழ் வளராது என்பது ரஜினியின் புதிய கண்டுபிடிப்பு' என்றும் கிண்டலுடன் கூறினார்
 
ஜெயகுமாரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கிண்டலுடன் கூடிய பதிவினை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் தெர்மோகோல் கண்டுபிடிப்பாளர்கள் அவரது கண்டுபிடிப்பை கேலி செய்வதாக டுவிட்டர் பயனாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments