அமைச்சரிலிருந்து பாடகராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (15:16 IST)
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி அசத்தினார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதனால் சென்னை முழுவது பல இடங்களுல் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்குமிலிருந்து ஏராளமாக தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவ்விழாவில் 7 லட்சம் பேர் பங்கேற்கப் போகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இவ்விழாவில் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அங்கிருந்த அமைச்சர் ஜெயக்குமாரை எம்ஜிஆர் பாடல்களை பாடுமாறு கட்சியினர் வலியுறுத்தினர். 
கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜெயக்குமார் எம்.ஜி.ஆரின் அழகிய தமிழ்மகள் இவள் என்ற பாடலை பாடினார். பின்னர் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடலை பாடினார். அங்கிருந்தவர்கள் அமைச்சரின் பாடல்களுக்கு பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.
 
அமைச்சர் ஜெயக்குமாருக்கு இப்படியொரு தனித்திறமை இருக்கிறதா என சமூக வலைதளங்களில் பலர் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments