Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்து வேலைகள் செய்தாலும் அது நடக்காது: மு.க.ஸ்டாலினை விளாசும் அமைச்சர் ஜெயக்குமார்!

சித்து வேலைகள் செய்தாலும் அது நடக்காது: மு.க.ஸ்டாலினை விளாசும் அமைச்சர் ஜெயக்குமார்!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (10:18 IST)
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் ஆட்சியை இழக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரை வலியுறுத்தி வருகின்றன.


 
 
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நீடிக்காது எனவும் விரைவில் கலைந்து, ஆட்சி மாற்றம் வரும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
 
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், யார் எந்த சித்து வேலைகள் செய்தாலும் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்ற அவர்களின் எண்ணம் மட்டும் நடக்காது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட யாருமே சட்டமன்ற தேர்தலை விரும்பவில்லை. மு.க. ஸ்டாலின் மட்டுமே தேர்தலை விரும்புகிறார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments