Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களை தேடும் பணியில் அறிவியல்பூர்வ உபகரணங்கள்: அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (08:41 IST)
சமீபத்தில் அடித்த ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் இதுவரை பல மீனவர்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் இன்னும் 443 மீனவர்களை காணவில்லை என்பது ஒரு சோகமான விஷயம் தான். மேலும் இதுவரை 98 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணாமல் போன 35 நாட்டுப்படகு மீனவர்கள், 427 விசைப்படகு மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அவர்களை தேடும் பணி அறிவியல்பூர்வமான முறையில் நவீன உபகரணங்களைக் கொண்டு நடைபெற்று வருவதாகவும், கடைசி மீனவர் மீட்கப்படும்வரை தேடும் பணி தொய்வில்லாமல் தொடரும் என்று அமைச்சர் ஜெயகுமார் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பங்கள் நடத்தி வரும் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments