Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் போடாதது ஏன்? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (11:05 IST)
அதிமுக செயற்குழு கூட்ட விவகாரத்தை தொடர்ந்து முதல்வர் கலந்து கொண்ட விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடைபெற்ற வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவிற்கான அழைப்பிதழில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறாததில் எந்த உள்நோக்கமும் இல்லை. கட்சி செயல்பாடுகள், மாநில அளவிலான நிகழ்வுகளில் இருவரது பெயருமே அழைப்பிதழில் இடம்பெறும். இது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நிகழ்ச்சி என்பதால் அவரது பெயர் இடம்பெறவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments