Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரசாந்த் கிஷோர் எழுதி கொடுக்க, ஸ்டாலின் பேசுகிறார்! – அமைச்சர் ஜெயக்குமார் ரிட்டர்ன்ஸ்!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (11:10 IST)
கொரோனா வைரஸிலிருந்து தமிழகத்தை காக்க எடப்பாடி அரசு தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக குறித்து யாராவது பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தால் உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுபவர் அமைச்சர் ஜெயக்குமார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அதிகம் கருத்துகளை தெரிவிக்காமல் இருந்து வந்த அமைச்சர் ஜெயக்குமார் தற்போது மு.க.ஸ்டாலினின் கண்டன அறிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக பேசியுள்ளார்.

தமிழக அரசின் அலட்சிய போக்கால் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும்  வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “திமுக தலைவர் தனது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் எழுதி தருவதை பேசுகிறார். “ஒண்றினைவோம் வா” திட்டம் கூட பிரசாந்த் கிஷோரின் ஏற்பாடுதான். அரசு ஜெட்வேகத்தில் செயல்படுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments