Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; அமைச்சர் துரை முருகன்

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (10:13 IST)
நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கிய நிலையில்  இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம் என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் துரை முருகன், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது என்றும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கின்றனர்; ஆனால் மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு என்றும் அமைச்சர் துரை முருகன் பேசினார்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments