Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதை புண்ணாக்கி கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில்!

காதை புண்ணாக்கி கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில்!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (10:02 IST)
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் தனியார் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறி வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
 
அமைச்சருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காதில் மருந்து போட்டு 2 மணி நேரம் மருத்துவமனையிலேயே ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள்.
 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பட்ஸ் வைத்து தனது காதை சுத்தப்படுத்தியபோது காதில் புண்ணாகிவிட்டதாம். இதனால் தான் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதாக அவரது வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments