Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் கண்டுபுடிச்சவன் கைல கிடைச்சான்னா..? – அமைச்சர் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (15:31 IST)
செல்போன் கண்டுபிடித்தவர் கையில் கிடைத்தால் மிதிக்க வேண்டும் என அமைச்சர் பாஸ்கர் பேசியுள்ளார்.

காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர் ”செல்போன் வந்ததிலிருந்து இளைஞர்கள் சீரழிந்து விட்டார்கள். செல்போன் கண்டுபிடித்தவன் கையில் கிடைத்தால் மிதிக்க வேண்டும். மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக அரசு மடிக்கணினி வழங்கப்படுகிறது. மாணவர்கள் அதை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

செல்போன் கண்டுபிடித்தவரை அமைச்சர் ஆவேசமாக பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. சிலர் கண்டுபிடித்தவரை உதைப்பதைவிட செல்போனை உடைப்பது மேலானது என கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments