Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர், எம்.பி இடையே சண்டை... கலெக்டரை தள்ளி விட்டதால் பரபரப்பு

அமைச்சர், எம்.பி இடையே சண்டை... கலெக்டரை தள்ளி விட்டதால் பரபரப்பு
, ஞாயிறு, 18 ஜூன் 2023 (07:33 IST)
தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் அமைச்சர் மற்றும் எம்பி மோதலுக்கு இடையில் கலெக்டரை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து கலெக்டர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
ராமநாதபுரம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்பி நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொள்ளும் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் இந்த விழாவில் நவாஸ் கனி எம்பி தாமதமாக வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னரே விழா தொடங்கப்பட்டு விட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் நவாஸ் கனி எம்பி கேள்வி எழுப்பினார். 
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி இடையே காட்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இந்த வாக்குவாதத்தின் இடையே மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் திமுகவின், காட்டாட்சி நிலவுகிறது - பாஜக தலைவர் அண்ணாமலை