Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் வாகனங்களின் தலைநகராக உருவாகி வருகிறது தமிழ்நாடு: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (14:59 IST)
இந்திய அளவில் தமிழ்நாடு மின் வாகனங்களின் தலைநகராக உருவாகி வருகிறது என அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
 
மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டின் உற்பத்தி பங்கு 24.47% உள்ளது எனவும், இலக்கான 30 சதவிகிதத்தை விரைவில் எட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார். பின் தங்கிய 25 மாவட்டங்களில் இருந்து 47% முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், இங்கு 37% வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
 
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் முள்ளிகொளத்தூரில், 28 ஏக்கரில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ₹14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை ஒன்று தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
 
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்கிட, தற்போதைய திட்ட மதிப்பின் உச்சவரம்பு ₹5 லட்சத்திலிருந்து ₹15 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான மானியமும் ₹1.25 லட்சத்திலிருந்து ₹3.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments