Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி அரசுக்கு, முதலாளிகள் மட்டுமே சிறந்த நண்பர்கள்: ராகுல் காந்தி கிண்டல்

மோடி அரசுக்கு, முதலாளிகள் மட்டுமே சிறந்த நண்பர்கள்: ராகுல் காந்தி கிண்டல்
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:04 IST)
பிரதமர் மோடியின் அரசுக்கு முதலாளிகள் மட்டுமே சிறந்த நண்பர்கள் என்றும் மற்றவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என்றும் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 20 நாட்களாக விவசாயிகள் தங்களுடைய உரிமைக்காக போராட்டம் நடத்தி வருவதை மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடி அரசு கருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள் என்றும், நாட்டைப்பற்றி எண்ணூம் குடிமக்கள் நகர்ப்புற நக்சல்கள் என்றும், புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனாவை பரப்புபவர்கள் என்றும், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானி என்றும் தெரிகிறது
 
இவ்வாறு பிரதமர்மீது குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ‘மோடிக்கு முதலாளிகள் மட்டுமே சிறந்த நண்பர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்து நேரடியாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து உள்ள காங்கிரஸ் ராகுல் காந்தி அவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜக என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபாநாயகரை இழுத்து சென்று வெளியேற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: சட்டசபையில் பரபரப்பு!