Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!

Advertiesment
milk

Siva

, வெள்ளி, 31 ஜனவரி 2025 (12:48 IST)
நாளை முதல் தனியார் பால் நிறுவனம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆந்திராவைச் சேர்ந்த தனியார் பால் உற்பத்தி நிறுவனம் திருமலா, நாளை முதல் அதாவது பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதேபோல் மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் பால் விலையை ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயும் தயிர் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் உயர்த்த உள்ளது. விலை உயர்வு குறித்த முழு விவரங்கள் இதோ:

நிறை கொழுப்பு பால் 1 லிட்டர் பாக்கெட் 70 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 36 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 62 ரூபாயில் இருந்து 64 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பால் 1 லிட்டர் பாக்கெட் 61 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், 500 மி.லி. பால் பாக்கெட் 27 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும் உயருகிறது.

அதேபோல் தனியார் நிறுவன தயிர் 1 கிலோ பாக்கெட் 67 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.  

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெகவில் இணையும் அதிமுக பிரமுகர்.. பனையூர் அலுவகத்திற்கு வருகை..!