விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம்!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (12:58 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலம் பெற வேண்டி உசிலம்பட்டியில் உள்ள திருமுருகன் கோவிலில் தேமுதிகவினர் பால் அபிஷேகம் செய்தனர்.


 
பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி உள்ள நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நுரையீரல் பிரச்சினை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டியும், மீண்டும் கம்பீரத்துடன் செயலாற்ற வேண்டியும் தேமுதிக மதுரை மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கரிமாத்தூர்பாண்டி, எம்எஸ்மாணிக்கம், வில்லாணி செல்வம், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் சிவபிரகாஷ், உசிலம்பட்டி நகரச்செயலாளர் அசோகன்,

எழுமலை பேரூர் கழகச் செயலாளர் சேகர், முனியாண்டி,தங்கப்பாண்டி, ராமசாமி, ஆண்டிச்சாமி, முத்துகருப்பன், மூக்கன்,மொக்கைச்சாமி, ராமர், அழகுராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து  கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கதம் கதம்!.. வேற கேளுங்க!.. செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்!...

தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

ஒரே ஒரு மெயில் ஹேக் செய்து ரூ.2.16 கோடி மோசடி.. காவல்துறையின் துரித நடவடிக்கை..!

இடிக்கப்படுகிறது டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.. என்ன காரணம்?

கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments