Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு மிலாது நபி தினம் இதுதான்: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..!

Siva
வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:13 IST)
ஒவ்வொரு ஆண்டும் மிலாது நபி தினம் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு மிலாது நபி தினம் எது என்பது குறித்து தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய பண்டிகைகள் அனைத்தும் பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு மிலாடி நபிக்கான பிறை செப்டம்பர் 27 ம் தேதி மாலை தெரிந்தது. எனவே செப்டம்பர் 28 ம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட்டது.  

இந்த நிலையில் இந்த ஆண்டு பிறை தெரியவில்லை. நேற்று அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. எனவே வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே மிலாதுன் நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments