Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் களம் இறங்கும் எம்.ஜி.ஆர் பேரன்! – அதிமுகவில் விருப்பமனு!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (13:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் நடந்து வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட எம்.ஜி.ஆர் பேரன் விருப்ப மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக விருப்ப மனு அளிக்க கடைசி தேதி மார்ச் 5 என அறிவித்திருந்த நிலையில் அதை மார்ச் 3 ஆக குறைத்தது. இந்நிலையில் நேற்றுடன் மனு அளித்தல் முடிவடைந்த நிலையில் சுமார் 6800 பேர் விருப்ப மனு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் வழி பேரனான வி.ராமச்சந்திரன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். ஆலந்தூர், பல்லாவரம் மற்றும் எம்.ஜி.ஆர் படுக்கையில் இருந்த படியே வெற்றி பெற்ற ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ள அவர் நேர்காணலிலும் கலந்து கொண்டுள்ளார். அவர் தேர்தலில் நின்றால் எம்ஜிஆர் பேரன் என்ற பிண்ணனி அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments