எம்ஜிஆர் 101வது பிறந்தநாள்; முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (10:21 IST)
எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலிலும் செல்வாக்குப் பெற்று மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக விற்கு ஆதரவாக இருந்த எம்ஜிஆர் அக்கட்சியில் ஏற்பட்ட  முரண்பாடுகள் காரணமாக, 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறி அதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். எல்லா மாநிலங்களிலும் அதிமுக வளர்ந்தமையால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்றேற்றக் கழமாக பெயர் மாற்றப்பட்டது. 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப்பெற்று எம்ஜிஆர் தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்தார். 17-01-1917 ஆம் ஆண்டு பிறந்த எம்ஜிஆர், 24-12-1987-ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி, கிண்டியிலுள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் எம்ஜியாருக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்: தவெக புறக்கணிக்க முடிவா?

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments