Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி முக்கொம்பை வந்தடைந்த காவிரி தண்ணீர்… விவசாயிகள் உற்சாக வரவேற்பு!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (15:13 IST)
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று முக்கொம்பு பகுதியை வந்தடைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டும் இன்று பாசனத்துக்காக நீர் திறக்கப்படும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போதைய நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று காவிரி நீர் திருச்சி முக்கொம்பை வந்தடைந்துள்ளது.  இதையடுத்து விவசாயிகள் தானியங்கள் மற்றும் மலர்களை தூவி காவிரி நீரை வரவேற்றனர். நாளை காலை கல்லணை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments