Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் - சென்னை மெட்ரோ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (20:40 IST)
சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் மெட்ரோ ரெயில்  இயங்கி வருகிறது. பல பகுதிகளுக்கு இந்த மெட்ரோ ரயில் இருப்பதால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அவ்வப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டு மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

சமீபத்தில், உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு மெட்ரோ ரயில்  டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது. போட்டிக்கான டிக்கெட் பயன்படுத்திய இலவச பயணம் மேற்கொள்ளலாம்,  இரவு நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை நேரம் வழக்கத்தை விட கூடுதலாக நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில்  சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 3 ஆம் தேதி ( ஞாயிறு ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டத்தில்  பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

ஸ்டாட்டிக் கியூ ஆர், வாட்ஸ் ஆப், போன் பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments