Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மேடையில் 2 பெண்களுடன் திருமணம்; ஆப்பு வைத்த சமூக வலைத்தளம்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (15:25 IST)
விருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.


 

 
விருதுநகர் அருகே உள்ள ம.வெள்ளையபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது அக்கா மகள் ரேணுகாதேவி மற்றும் மற்றொரு அக்கா மகள் காயத்திரி என்பவரையும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
 
இதற்காக திருமண பத்திரிகை உறவினர்களுக்கு வழங்கப்பட்டன. ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஊர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ரேணுகாவை மட்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
 
மேலும் சமூக நலத்துறை அலுவலர், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இதுகுறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்