Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் இல்லத்தில் மீண்டும் ஆலோசனை!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (10:29 IST)
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
 
இதற்கிடையே ஓபிஎஸ் அதிமுகவில் வகித்து வரும் பதவிகளில் இருந்து அவரை நீக்க ஈபிஎஸ் அணி முயற்சிகள் மேற்கொண்டு வருவதால் அதிமுக கட்சியே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இதற்காக சி.வி. சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments