Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் இல்லத்தில் மீண்டும் ஆலோசனை!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (10:29 IST)
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
 
இதற்கிடையே ஓபிஎஸ் அதிமுகவில் வகித்து வரும் பதவிகளில் இருந்து அவரை நீக்க ஈபிஎஸ் அணி முயற்சிகள் மேற்கொண்டு வருவதால் அதிமுக கட்சியே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இதற்காக சி.வி. சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments