வழக்குக்கு மேல் வழக்குகள்... புழல் சிறையில் புழுங்கும் மீரா மிதுன்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:26 IST)
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். பின்னர் கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்நிலையில் ஜோ மைக்கேல் என்பர் மீரா மிதுன் தன்னை சமூகவலைத்தளங்கில் அவதூறு பேசுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் சிறையிலேயே மீண்டும் கைதுசெய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!

காதலி, மனைவி இருவரையும் கொன்று ஒரே இடத்தில் புதைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments