Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்குமாரின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை

ராம்குமாரின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (00:00 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில், ராம்குமார் சமையல் அறைக்கு செல்லும் மின்சார கம்பியை கடித்து தற்கொலை முயற்சித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
 

 
இந்நிலையில், மருத்துவனையில் ராம்குமாரின் உடலை பரிசோதித்த மருத்துவர் அளித்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து அளித்துள்ள மருத்துவ அறிக்கையில், "ராம்குமாரின் கன்னம் மற்றும் மார்பு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மாலை 4.35 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைது செய்யும் முன்பே தற்கொலைக்கு முயன்றதாக புகைப்படம் எடுத்தது யார்? - திருமாவளவன் கேள்வி