ப்ரியா மரணம்: மருத்துவ கல்வி இயக்குனரக அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (07:44 IST)
பிரியாவின் மரணம் குறித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு கால் அறுவை சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட தவறு காரணமாக அவர் பரிதாபமாக பலியானார் 
 
இதனையடுத்து பிரியாவுக்கு மருத்துவம் செய்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
 
அந்த அறிக்கயில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வைத்து கவனக்குறைவால் உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
 
முதல்கட்டமாக பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை விசாரணை செய்ய சம்மன் அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments