Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை முட்டை ஆஃப் பாயில் வேண்டாம் – இறைச்சியும் நன்றாக வேகவைத்து சாப்பிடவும்!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (09:43 IST)
பறவைக் காய்ச்சல் எதிரொலி காரணமாக பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் போன்றவற்றை சாப்பிட வேண்டாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கால்நடை சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களின் கடும் குளிர் காரணமாக இந்த வைரஸ் பரவுவது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவது குறித்த ஆலோசனைகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கால்நடை சுகாதார ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘இதுவரை பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு கண்டறியப்படவில்லை. ஆனாலும் பரவ வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த அச்சுறுத்தல் நீங்கும் வரை கோழி, வாத்து ஆகியவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேகவைத்து சாப்பிடவேண்டும். 70 டிகிரியில் அவற்றில் உள்ள கிருமிகள் இறந்துவிடும். பச்சை முட்டை மற்றும் ஆஃப் பாயில் ஆகியவற்றை தவிர்க்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments