Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:28 IST)
வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. திருப்பதி கோவில் லட்டு உள்பட பல கோவில்களின் பிரசாதங்கள் ஆன்லைனில் புக் செய்தால் தபால் மூலம் வருவது உண்டு.
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களும் தபால் மூலம் பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
 
புகழ்பெற்ற கோயில்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தபால் மூலம் கோவில் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments