Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை ’வாழ வைத்த தமிழ் தெய்வங்களுக்கு நன்றி ’: ’விருது பெற்ற ரஜினி உருக்கம்’ !

என்னை ’வாழ வைத்த தமிழ் தெய்வங்களுக்கு நன்றி ’: ’விருது பெற்ற  ரஜினி உருக்கம்’ !
, புதன், 20 நவம்பர் 2019 (17:15 IST)
ICON OF GOLDEN JUBILEE நடிகர் ரஜினி காந்தின் 44 வருட சினிமா வாழ்வை கௌரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசு, சமீபத்தில் சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் என்ற விருதை அறிவித்தது.
இந்நிலையில்,இன்று , 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இணைந்து , தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ’ஐகான் ஆந் ஜூபிளி’ என்ற விருது வழங்கி கௌரவித்தார்.
 
இதனையடுத்து, விழா மேடையில் பேசிய ரஜினிகாந்த், எனக்கு விருது வழங்கி கௌரவித்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர் , எனக்கு முன்மாதிரியாகத் திகழும் அபிதாப்பச்சனுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
 
அதன்பின்னர், தமிழில் பேசிய ரஜினிகாந்த், ’என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி ’என்று தெரிவித்தார்.
 
மேலும், தாயரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கு விருதை சமர்பிக்கிறேன் என தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பாகுபலி நடிகர்’ தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : அதிர்சியில் நடிகர்கள் !