Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் மாணவர் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவர்.. கரூர் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (11:26 IST)
கரூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் கழுத்தை எம்பிஏ மாணவர் அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கரூர் மாவட்டம் குளித்தலையில்  தனியார்  பொறியியல் கல்லூரியில்  படித்து வரும் மாணவர்  நிதிஷ்குமார் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.   அப்போது பொறியியல் கல்லூரியின் மாணவர் நிதிஷ்குமாரின் கழுத்தை எம்பிஏ மாணவர் அண்ணாமலை அறுத்ததாக தெரிகிறது.

இதனால் படுகாயம் அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

இதனை அடுத்து கழுத்தை அறுத்த எம்பிஏ மாணவர் அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments