மயிலாடுதுறை – சேலம் நேரடி ரயில் சேவை தொடக்கம் : பயணிகள் கொண்டாட்டம்!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (08:16 IST)
மயிலாடுதுறை மற்றும் சேலம் இடையே  புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார். 
 
நீண்ட காலமாக மயிலாப்பூர் - சேலம் இடையே ரயில் போக்குவரத்து அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
 
மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒன்றிணைத்து தற்போது மயிலாடுதுறை சேலம் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. 
 
இந்த ரயில் தினசரி இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த ரயில்  கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி கரூர் நாமக்கல் வழியாக 1.45 மணிக்கு சேலம் செல்கிறது 
 
அதேபோல் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments