Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெடு முடிந்தது: போராட்ட தேதியை அறிவித்தார் அண்ணாமலை!

annamalai
, வியாழன், 26 மே 2022 (07:45 IST)
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கான வரியை குறைத்த நிலையில் குஜராத் ராஜஸ்தான் ஒடிசா உள்பட பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன
 
ஆனால் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்க முடியாது என கூறி விட்டது 
 
இந்த நிலையில் தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் 72 மணி நேரம் கெடு கொடுப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்
 
 இந்த நிலையில் தற்போது கெடு முடிவடைந்த நிலையில் போராட்ட தேதியை அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
பெட்ரோல் டீசலுக்கான விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து மே 31-ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட போவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர் அறிவிப்பு