Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமுருகன் காந்தி தேச துரோக வழக்கில் கைது

திருமுருகன் காந்தி தேச துரோக வழக்கில் கைது
, வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (13:28 IST)
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தேச துரோக வழக்கில் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 
மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்றார். ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 
 
பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
 
அப்போது அவரை பெங்களூர் விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக காவல்துறையினர் திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
 
ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பர்ட்டு விடுதலை ஆனார். பல வழக்குகள் அவர் மீது உள்ளது. அதை எல்லாம் சந்தித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞரே கடைசி அரசியல் தலைவர் : இளையராஜா புகழாரம்