கணவன் சொத்துகளில் மனைவிக்கு சமபங்கு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (14:16 IST)
திருமணத்திற்கு பின்னர் கணவன் சேர்க்கும் சொத்துக்களில் மனைவிக்கும் சமபங்கு உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை பின்பற்றி சட்டம் ஏற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
 மனைவியின் உழைப்பை மதிப்பற்றதாக எப்படி பார்க்க முடியும் என்ற வாதங்களை நீதிமன்றம் முன் வைத்தது , மனைவிக்கும் கணவன் சொத்தில் சமமாக பங்கு உண்டு என்பதை தீர்ப்பு சுட்டிக்காட்டியதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழக அரசு இந்த தீர்ப்பின் அடிப்படையில் திருமணத்திற்கு பின் சேரும் மொத்த சொத்துகளில் மனைவிக்கு சம பங்கை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments