Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோடியாக பூங்காவிற்குள் நுழைய திருமண சான்றிதழ்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதிரடி

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (18:20 IST)
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவிற்கு பொழுது போக்க வரும் காதல் ஜோடிகளை தடுக்க ஜோடியாக வருவர்களிடம் திருமண சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தாரவியல் பூங்காவிற்குள் ஜோடியாக வருபவர்களிடம் ஆதார் அட்டை மட்டுமின்றி அவர்களுடைய திருமண சான்றிதழையும் காட்டினால்தான் அனுமதிக்கப்படுகின்றனர். 
 
பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகளை தடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பேராசரியரான எம்.கண்ணன் அறிக்கையை மேற்கொள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
 
குடும்பங்கள் தவிர, ஜோடியாக வந்தால் திருமண சான்றுடன் வருபவர்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பூங்காவிற்குள் நுழைய தடையில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்