Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமழிசை காய்கறி மார்க்கெட் க்ளோஸ்: எப்போ தெரியுமா?

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (11:32 IST)
ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு. 
 
கொரோனா ஊரடங்கின் போதும் இயங்கிய கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். 
 
இதனை அடுத்து சமீபத்தில் யம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டன. அங்கு காய்கறி சந்தை அமைக்கப்பட்டதில் இருந்து காய்கறி வியாபாரம் மந்தமாகவே இருந்தது. 
 
இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 
 
குறிப்பாக நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 21, 28 ஆம் தேதி அதாவது அடுத்த இரண்டு ஞாயிற்றுகிழமைகளில் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments