Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்ச்சை கருத்து தெரிவித்த மாரிதாஸ் கைது! – டிசம்பர் 23 வரை சிறை தண்டனை!

சர்ச்சை கருத்து தெரிவித்த மாரிதாஸ் கைது! – டிசம்பர் 23 வரை சிறை தண்டனை!
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (09:34 IST)
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மாரிதாஸ் அவ்வபோது சர்ச்சையான கருத்துகளால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக மாரிதாஸ் மீது வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாரிதாஸை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவரை டிசம்பர் 23 வரை சிறையில் அடைக்க மதுரை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதம் மாறிவிடுவாரோ என்ற பயம்; மனைவி, குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை!