Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறைமலை அடிகளார் பேரனுக்கு அரசு பணி: முதல்வர் உத்தரவு

மறைமலை அடிகளார் பேரனுக்கு அரசு பணி: முதல்வர் உத்தரவு
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (19:35 IST)
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் மக்கள் நல திட்டங்கள் குறித்த அவரது அறிவிப்பு ஒவ்வொன்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி வறுமையில் வாடும் பிரபலங்களின் வாரிசுகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எம்கே தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரனுக்கு வீடு வழங்கி நிதி உதவி செய்தார் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் தற்போது மறைமலை அடிகளார் பேரனுக்கு அரசு பணி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மறைமலை அடிகளாரின் பேரன் சிவக்குமார் என்பவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இதனையடுத்து அவருக்கு பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.வி. சிந்து: தாயகம் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு