Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பீதி: தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (10:30 IST)
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் நேற்று நடந்த பொது தேர்வில் பல மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்று வந்த இந்த பொதுத்தேர்வில் நேற்று 34,000 மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை முதல் ஊரடங்கு அறிவிக்க இருந்ததாலும், கொரோனா பீதியினாலும் நீண்ட தொலைவுகளிலிருந்து வந்து தேர்வெழுதும் மாணவர்கள் பலர் தேர்வுகளுக்கு வரவில்லை என தெரிகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 மாணவர்கள் தேர்வு எழுத வராதது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments