Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் வாயத் தொறந்தா எல்லோரும் சூசைட் பண்ணிப்பாங்க – நாம் தமிழர் கூட்டத்தில் மன்சூர் அலிகான் !

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:58 IST)
நாம் தமிழர் கட்சி சார்பில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வண்ணாரப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய மன்சூர் அலிகான் அதிரடியாக பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக வண்னாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் நடத்திய போராட்டத்தின் அவர்களைக் கலைக்க போலிசார் தடியடி தாக்குதல் நடத்தியது பரபரப்பை உண்டாக்கியது. போலீஸாரின் அராஜகத்தைக் கண்டித்து தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக நாம் தமிழர் கட்சியும் வண்ணாரப்பேட்டையில் கூட்டத்தை நடத்தியது.

அந்த கூட்டத்தில் அக்கட்சியின் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘மன்சூரலிகான் வாயை திறந்தாலே, எப்ஐஆர் போட்டுட்டு 10 பேர் வெளியே ரெடியா நிப்பாங்க. ஆனா அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது. மக்கள் போராட்டத்துல நான் உள்ள புகுந்து எதும் பிரச்சனை ஆகிடக்கூடாதுன்னு பாக்குறேன். இல்லாட்டி நான் வாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க, அவனவன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிடுவான். அங்க இருக்கவங்களுக்கு ஏபிசிடி யே தெரியாது. ஆனா என் ஆர் சி, சி ஏ ஏ-னு இன்னும் நாலு வருஷத்துக்கு இதையேதான் பண்ணிட்டு இருப்பாங்க. அதனால இவங்களை ஒட்டுமொத்தமா துடைச்செறியறதுதான் என்னுடைய வேண்டுகோள். பத்திரிக்கையாளர்கள் ஏதாவது கட்டுரை எழுதி அவர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி எறியணும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments