Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம்: தென்மாவட்ட மழை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ்

MANO THANGARAJ
, செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:41 IST)
தென் மாவட்டங்களில் பெய்யும் மழை குறித்த வானிலை அறிவிப்பில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்  

இந்திய வானிலை ஆய்வு மையம் மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் முன்னறிவிப்பு தெரிவிக்கவில்லை என்றும் வானிலை எச்சரிக்கை நேர வேறுபாடு இருந்தது என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரெட் அலர்ட் மற்றும் உண்மையான வெள்ளப்பெருக்கு இடையே நேர இடைவெளி மிகவும் குறைவாக இருந்தது என்றும்  தாமதம் மற்றும் உடனடி துல்லியமான வானிலை எச்சரிக்கைகள் அவசியத்தை இது காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளில்  மழைப்பொழிவு கணிப்புகள் உண்மையானவை என்றும்  மேற்கத்திய வானிலை அறிவிப்புகள் மழையை துல்லியமாக காட்டுகின்றன என்றும்  அவர் தெரிவித்தார்.  வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்ததால்தான் தற்போது மீட்பு பணிகள் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. அண்டை மாநிலத்தில் மாஸ்க் கட்டாயம்..!