எங்களை எதிர்த்தா சாலையில் நடமாட முடியாது! – அமைச்சர்களுக்கு மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 4 மே 2022 (18:31 IST)
தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க தடை விதித்துள்ளது குறித்து மன்னார்குடி ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி மே 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

முன்னதாக இதுகுறித்து மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பட்டண பிரவேச நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஆதீனத்துடன் கலந்து பேசி முடிவை சொல்லுவார் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பட்டண பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க அனுமதி மறுத்துள்ளது குறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள மன்னார்குடி ஜீயர் “இந்து மதத்தை எதிர்தார் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீதிகளில் நடமாட முடியாது. தருமபுர ஆதீனம் பட்டண பிரவேசத்தை நடத்தியே தீருவோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments